Saturday, January 30, 2010

”மஹாத்மா”





இன்று மஹாத்மா காந்தி அவர்கள் அமரத்துவம் அடைந்த தினம்.

திரு மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாட்டு அரசாங்கம் மஹாத்மாவை “மஹாத்மா” என்று ஒப்புக்கொள்ளவில்லை.
“உத்தமர்” என்ற அளவிலே மட்டும் ஒப்புக்கொள்ளுகிறது.

மஹாத்மா காந்தி சாலை என்ற பெயரை “உத்தமர் காந்தி” என்று மாற்றி ஆணை இடுவதிலே பெருமிதம் கொள்ளுகிறது.

மஹாத்மா என்ற சொல் வடமொழிச் சொல்லாம்.  அதற்குப் பொருள் உத்தமராம்.

இது சரிதானா?

மஹாத்மா என்ற சொல்லுக்கு   மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்று பொருள் கொள்ளலாம்.  ஆன்மீகத்திலே தலைசிறந்து நிற்பவர்; பண்பின் சிகரம்; நெடிது நிற்கும் சான்றோர் என்று சொல்லலாம்.  இந்தப் பண்பு நலங்களின் ஒட்டுமொத்தப் பொருளமைந்த சொல் “மஹாத்மா”.

“உத்தமர்” என்ற சொல்லும் வடமொழிச்சொல்லே! சான்றோர்; மனிதப் பண்புகளில் உயர்ந்தவர் என்று பொருள்படுவது. திராவிடர் கழகப் பற்றாளர்கள் அடிக்கடி பயன்படுத்தும் மனிதநேயர் என்றும் சொல்லலாம். ஆன்மீகத்தை ஒப்புக்கொள்ளாதவர்களில் உத்தமர்கள் இருக்கலாம்.   ஆனால் உத்தமர்கள் எல்லோரும் மஹாத்மாக்களாக இருக்கமுடியாது.

மஹாத்மா காந்தி வெறும் மனித நேயர் மட்டுமா?  கேவலம் அவர் மனிதர்களில் உத்தமர் மட்டும்தானா? இன்றையத் தமிழ்நாட்டு அரசுக்கும் அதை நடத்தும் அரசர்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

ஃப்ரெஞ்ச், இத்தாலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலமொழிகளில் மஹாத்மா என்றே அழைக்கிறார்கள்; எழுதுகிறார்கள்.

இந்தச் செய்தியைப் படியுங்கள்:

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென் மேற்கு ஹூஸ்டன் பகுதியில் ஹில்கிராப்ட் மாவட்டத்தில் தெற்குஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேல் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளனர்.
இவர்கள் இங்கு பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். பலர் அலுவலக பணிகளிலும் ஈடுப்பட்டுள்ளனர். எனவே இப்பகுதியை குட்டி இந்தியாஎன்று செல்லமாக அழைப்பது வழக்கம்.
எனவே டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹில்கிராப்ட் மாவட்டத்துக்கு இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக விடுத்து வந்த இவர்களது கோரிக்கை மகாத்மா காந்தியின் 141-வது பிறந்த ஆண்டான தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹில்கிராப்ட் மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டுவதாக ஹ¨ஸ்டன் நகர மேயர் ஆன்னிஸ்பார்கர் அறிவித்தார். இந்த மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்  

அமெரிக்காவில் உள்ள  ஹில்கிராஃப்ட் மாவட்டத்திற்கு “மஹாத்மா காந்தி” மாவட்டம் என்று பெயர் சூட்டப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னையில் “மஹாத்மா காந்தி சாலை” என்று வழங்கி வந்த சாலையின் பெயர் “உத்தமர் காந்தி” சாலையாக கோணல்மனம் கொண்டவர்களால் மாற்றப்படுகிறது.

உலக மாந்தரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் மஹாத்மா காந்தி.
உலகம் முழுவதும் மஹாத்மா என்று சொன்னால் அது காந்தி அடிகளைத்தான் குறிக்கிறது என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள்.
மஹாத்மா காந்தி சாலையை உத்தமர் காந்தி சாலையாக்கியவர்கள்?

1 comment:

அண்ணாமலையான் said...

சார், என்ன வேன்னா மாத்தட்டும், ஆனா நாம நம்ம இஷ்டத்துக்கு தானெ கூப்புடுவோம்?